News November 28, 2024
அலுவலர்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் போக்குவரத்து சாலை விபத்துக்களை நிரந்தரமாக தடுக்கும் வகையில், வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார் மற்றும் சாலை பாதுகாப்பு பணியாளர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள் அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் ஆலோசனை கூறினார். சாலை விபத்துகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில் அலுவலர்கள் ஊழியர்கள் உடனே இணைந்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
Similar News
News August 24, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

கள்ளக்குறிச்சி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
குழந்தை தொழிலாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் புகார்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதுகுறித்து தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்
News August 24, 2025
கள்ளக்குறிச்சி மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்கிவருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
4 சட்டமன்ற தொகுதிகள்
1 நாடாளுமன்ற தொகுதிகள்
3 நகராட்சி
5 பேரூராட்சிகள்
2 கோட்டங்கள்
7 வட்டங்கள்
562 வருவாய் கிராமங்கள்
412 கிராம பஞ்சாயத்துகள்
9 ஊராட்சி ஒன்றியங்கள்
ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.