News November 28, 2024
உதவி ஆணையாளர் பதவியில் இருந்து விடுவித்து உத்தரவு

சேலம் மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் பதவியில் இருந்து புவனேஸ்வரனை விடுவித்து மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக அம்மாப்பேட்டை மண்டல உதவி ஆணையாளர் வேடியப்பன், கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
சேலம்: மின்தடை அறிவிப்பு – நாளை ரெடியா இருங்க!

நாளை மின் பராமரிப்பு காரணமாக சிங்கிபுரம், வாழப்பாடி, தெடாவூர், கூடமலை, தலைவாசல், தம்மம்பட்டி, அறகளூர், துக்கியாம்பாளையம், பேளூர், முத்தம்பட்டி, மங்களபுரம், கிருஷ்ணாபுரம், மண்மலை, பாலகாடு, கடம்பூர், கூலமேடு, கெங்கவல்லி, புனல்வாசல், வீரகனூர், ஓதியத்தூர், லத்துவாடி, ஜங்கமசமுத்திரம், செந்தாரப்பட்டி, புத்தூர், உலிபுரம், நாரைகிணறு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
News November 13, 2025
சேலம்: உள்ளூரில் சூப்பர் வேலை.. அரிய வாய்ப்பு!

சேலம் அயோத்திபட்டினத்தில் செயல்பட்டு வரும் Sri krishnav electronic and mobile நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் தலா ஒரு Front sales officer பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை மற்றும் ஏதேனும் விற்பனை அனுபவம் ஆகியவை இருப்பது அவசியம். சம்பளம் ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு +2 முதல் டிகிரி படித்த 25 வயது நிரம்பியவர்கள் இந்த லிங்கை <
News November 13, 2025
சேலம்: ரூபாய் 2 கோடி அபராதம் வசூல்!

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் டிக்கெட் இன்றி பயணம் செய்த 15,512 பேரிடம் இருந்து ரூபாய் 1.43 கோடி, முறையான டிக்கெட் இன்றி பயணித்த 10,173 பேரிடம் ரூபாய் 66 லட்சம், கூடுதல் லக்கேஜ் எடுத்துச் சென்ற 81 பயணிகளிடம் ரூபாய் 50,179 என மொத்தம் ரூபாய் 2.09 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.


