News November 28, 2024

வயநாடு மாணவர்களுக்கு உதவி

image

கூடலூரில் உள்ள சேவாலயம் அறக்கட்டளை சார்பில், கேரளா வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, தன்னார்வ அமைப்பின் சார்பில் இலவச சைக்கிள், ‘லேப்டாப்’ வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முரளிதரன் தலைமை வகித்தார். 20 மாணவர்களுக்கு சைக்கிள், மூன்று மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ மற்றும் கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

Similar News

News August 21, 2025

நீலகிரி: தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

நீலகிரி, ஊட்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நாளை பிங்கர் போஸ்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு, பட்டதாரிகள், ஐடிஐ கணினி இயக்குபவர்கள், ஓட்டுனர்கள் என அனைத்து விதமான தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 21, 2025

நீலகிரி காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தலைமையில் இன்று காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டமானது நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எடுத்துக் கூறினார்.

News August 21, 2025

போக்சோ மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை தாலுக்கா, குன்னூர் தாலுக்கா, கூடலூர் தாலுக்கா, கோத்தகிரி தாலுக்கா, பந்தலூர் தாலுக்கா, குந்தா தாலுக்கா, போன்ற ஆறு தாலுகாவிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் பிரதான சாலைகள் மற்றும் பள்ளிகளில், இன்று நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக போக்சோ மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வை அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்தினர்.

error: Content is protected !!