News November 28, 2024
நாமக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் அருள்குமார், 22 இவர் தேர்வுக்கு விண்ணப்பிக்க பெங்களூரு சென்று விட்டு, ஆம்னி பஸ்சில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். நேற்று முன்தினம் குமாரபாளையம் டீச்சர்ஸ் காலனி அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அருள்குமார், டிரைவர் ஜெயக்குமார், கிளீனர் ஆகிய மூவரும் காயமடைந்தனர். அருள்குமார் உயிரிழந்தார்.
Similar News
News August 18, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

நாமக்கல் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 17, 2025
கிட்னி விற்பனையை தொடர்ந்து கல்லீரல் விற்பனை

பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி விற்பனை நடைபெறுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இது குறித்து மருத்துவத்துறையினர் விசாரித்து வருகின்றனர் .இந்நிலையில் பள்ளிபாளையம் அலமேடு பகுதியில் உள்ள பெண் தொழிலாளி பேபி என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் 8 லட்ச ரூபாய் பணத்திற்காக தனது கல்லீரலை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 17, 2025
நாமக்கல்: பதிவு செய்தால் பணம் கிடைக்கும்!

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு 10th தேர்ச்சி பெறாதவர்கள், பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு, பட்டதாரிகள், படித்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியானோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286222260 தொடர்பு கொள்ளலாம். யாருக்காவது பயன்தரும் SHARE பண்ணுங்க!