News November 28, 2024

சங்கரன்கோவில்: படைப்புழுவை கட்டுப்படுத்த அதிகாரிகள் டிப்ஸ்!

image

சங்கரன்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் திருச்செல்வன் நேற்று(நவ.,27) வெளியிட்ட செய்தி குறிப்பில், மக்காச்சோளப் பயிரில் படை புழுக்கள் பயிரின் இளம் பருவத்தில் இலைகள் மற்றும் குருத்துப் பகுதியை சேதப்படுத்துகின்றன. இதை தடுப்பதற்கு, உழவின்போது வேப்ப புண்ணாக்கு பயன்படுத்த வேண்டும். 1 கிலோ விதைக்கு 4 மில்லி சையாண்டி புரோல் பயன்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

Similar News

News December 7, 2025

தென்காசி: மகளிர் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

image

தென்காசி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <>க்ளிக் <<>>செய்து Bank seeding status-ல் ஆதார் எண், மொபைல் ஓடிபி -ஐ பதிவு செய்து பாருங்க. தகவல்களுக்கு: தென்காசி கோட்டாச்சியரிடம் (04633-2222120) அழையுங்க. SHARE பண்ணுங்க!

News December 7, 2025

தென்காசி: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News December 7, 2025

தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

கடையம் அருகே காசிவிஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவர் நேற்று தனது வீட்டு மாடுகளை கட்டிவிட்டு வருகையில் கால் வழுக்கி அருகில் இருந்த கம்பியை பிடித்துள்ளார். அதில் மின்கசிவு இருந்த காரணத்தால் மின்சாரம் தாக்கியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை G.H-க்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இசக்கிமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!