News March 22, 2024
பல்லாவரம்: நாடாளுமன்ற ஆலோசனைகூட்டம்

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முன்னிட்டு பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் தாம்பரம் மாநகராட்சி-1வது மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பம்மல் தெற்கு பகுதிக்குட்பட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News November 24, 2025
செங்கல்பட்டு: கிரேன் மோதி காவலாளி பலி

கூடுவாஞ்சேரி பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணிபுரிந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாசி (45), பணியில் இருந்தபோது பின்னால் இயக்கப்பட்டு வந்த கிரேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
செங்கல்பட்டு: ஒரே இரவில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோ-களில் திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், ஸ்டாலின் மற்றும் அண்ணா தெருக்களில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் டேஷ்போர்டுகளை உடைத்து, அதிலிருந்த சில்லரை பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஒரே இரவில் நடந்த இச்சம்பவம் குறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
News November 24, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


