News November 28, 2024
வேலூரில் 52 பேருக்கு பணிநியமன ஆணை

இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வாகியுள்ள 52 பேருக்கு பணிநியமன ஆணைகளை வேலூர் சரக டிஐஜி தேவராணி வழங்கினார். வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயுதப்படைக்கு தேர்வான 17 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு தேர்வான 22 பேர், சிறைத்துறைக்கு தேர்வான 2 பேர், தீயணைப்பு துறைக்கு தேர்வான 11 பேர் என மொத்தம் 52 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Similar News
News August 25, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்!

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News August 25, 2025
வேலூர் மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க.!

வேலூர் மக்களே.. சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் கண்டிப்பாக ஒரு முறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
வேலூர்: நாளை எங்கெங்கெல்லாம் முகாம்

வேலூர் மாவட்டத்தில் நாளை (ஆக.26) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்; 1.வேலூர் மாநகராட்சி – சாலம்மாள் கல்யாண மண்டபம் சைதாப்பேட்டை. 2.பள்ளிகொண்டா – பேரூராட்சி அலுவலகம் சமுதாயக்கூடம். 3.காட்பாடி- ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் கரிகிரி.
4.அணைக்கட்டு- டி.எம்.டி மஹால் கழனிபாக்கம். 5.குடியாத்தம்- வி.பி மஹால் நெல்லூர்பேட்டை. 6.பேரணாம்பட்டு-சாந்தி ஜீவா திருமண மண்டபம் சின்ன தாமல் செருவு.