News November 28, 2024
44 காவலர்களுக்கு பணி நியமன ஆணை

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, புதுகையில் நியமனம் பெற்றுள்ள 44 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே பணி நியமன ஆணைகளை நேற்று வழங்கினார். அப்போது அவர் ‘பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்’ என வாழ்த்து தெரிவித்தார்.
Similar News
News November 8, 2025
வெள்ளனூர் அருகே பைக் மோதி இளைஞர் படுகாயம்

வெள்ளனூர் அடுத்த முத்துடையான்பட்டி சாலையில் உஜின் பிலாரன்ஷ்(18) என்பவர் நேற்று SOCயில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறம் பைக்கை ஓட்டி வந்த தியாகராஜன் (31) மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
புதுக்கோட்டை: B.E முடித்தவர்களுக்கு ISRO-வில் வேலை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் வரும் ஜன.24 தேசிய பெண்குழந்தை தினத்தன்று மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் உள்ளிட்ட வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாராட்டு பத்திரமும் ரூ 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி 04322 222270 மூலமாக தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.


