News March 22, 2024
திருவள்ளூர்: போலீஸ்-கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு கூட்டு சாலைகள் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி தலைமையில் நேற்று இரவு அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Similar News
News July 4, 2025
கர்ப்பிணியை தாக்கிய காவலர்

கனகம்மாசத்திரம் சிவாஜி என்பவர் மதுமிதாவிற்கு போனில் தகாத வார்த்தையால் குறுஞ்செய்தி அனுப்பியதாக மதுமிதா, 2தோழிகளுடன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றுள்ளனர். அப்போது காவலர் ராமர் மூவரை தாக்கியுள்ளார். காவலர் தாக்கிய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. TNமனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சம்பவம் குறித்து 6வாரங்களில் விரிவான அறிக்கை தர திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு உத்தரவு.
News July 4, 2025
திருவள்ளூர் உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

திருவள்ளூர் உழவர் சந்தையின் இன்று (ஜூலை 04) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.30, உருளை ரூ.40, பீர்க்கங்காய் ரூ.45, புடலங்காய் ரூ.35, அவரைக்காய் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, சுரைக்காய் ரூ.45, பெரிய வெங்காயம் ரூ.30, பாகற்காய் ரூ.50, கத்திரிக்காய் ரூ.50, முருங்கைக்காய் ரூ.80, வாழைப்பழம் ரூ.45, தேங்காய் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.
News July 4, 2025
சின்னகாவனத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னகாவனம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26 திட்டத் தொடக்க விழா இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி சிறப்பித்தார். இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வேளாண்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.