News November 27, 2024

ஊட்டி: லஞ்ச வழக்கில் சிக்கியவருக்கு புதிய பதவி

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் கணக்கில் வராத பணம் ரூ.11.70 லட்சம் பறிமுதல் செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் நகராட்சி கமிஷனர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News August 13, 2025

நீலகிரியில் நாளை முகாம்கள் நடைபெறும் இடங்கள்!

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம், 6 தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. நாளை (ஆகஸ்ட் 14) நடைபெறும் முகாம்களின் விவரங்கள்: குன்னூர் நகராட்சி – பாரதியார் மண்டபம், ஊட்டி நகராட்சி – ஸ்ரீனிவாசா மண்டபம், சோலூர் பகுதி – உரட்டி சமுதாயக் கூடம், கெங்கரை பகுதி – கெங்கரை சமுதாயக் கூடம், குந்தா பகுதி – கூர்மையாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெறுகிறது.

News August 13, 2025

நீலகிரி: 8வது போதும்.. அரசு வேலை ரெடி!

image

நீலகிரி மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 13, 2025

ஆட்சியர் கூட்டரங்கில் சட்ட விழிப்புணர்வு முகாம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து தமிழக அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!