News November 27, 2024

மாலை 5.30 மணிக்கு புயல் உருவாகிறது

image

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 1 மணி நேரத்திற்கு 10 கி.மீ வீதம் நகர்ந்து வருவதாகவும், சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகாலை வரை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 19, 2025

வார விடுமுறை.. ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு

image

வார விடுமுறையையொட்டி ஆக. 22, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும், கோயம்பேட்டிலிருந்து நாகை, ஓசூர், பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளன. பிற நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.

News August 19, 2025

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கேமிங் மசோதா அறிமுகம்

image

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மக்களவையில் கேமிங் மசோதா நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான மோசடிகள் தொடர்ந்து அரங்கேறும் நிலையில் அதை தண்டனைக்குரிய குற்றமாக குறிப்பிட்டு PM மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் கேமிங் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரபலங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்த கூடாது. இதற்கு ஏற்கனவே 28% ஜிஎஸ்டி வரி உள்ளது.

News August 19, 2025

திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி: EPS

image

TASMAC கடைகளில் பாட்டிலுக்கு ₹10 அதிகம் வாங்கி 4 ஆண்டுகளில் ₹22,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக EPS விமர்சனம் செய்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகம் மீட்போம்’ பரப்புரையின் 100-வது தொகுதியான காட்பாடியில் பேசி வரும் அவர், திமுக ஆட்சியில், விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், கொரோனா காலத்தில் மக்களை கண் இமைபோல் காத்த அதிமுக அரசை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்றார்.

error: Content is protected !!