News November 27, 2024
BREAKING:நீலகிரி வந்தடைந்தார் ஜனாதிபதி

பல்வேறு பணிகளுக்காக தமிழகத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு சற்றுமுன் நீலகிரி வந்தடைந்தார். முன்னதாக டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து, சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவன் வந்தடைந்தார். ஜனாதிபதி வருகையையொட்டி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

நீலகிரி மாவட்ட காவல்துறையால் இன்று (17.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் உதவி தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்களும் அடங்கியுள்ளது.
News August 17, 2025
நீலகிரி: புதிய வீடு கட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், www.onlineppath.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Single Window Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமானத் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு 94427 72701 என்ற உதவி எண்களில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
BRAKING: நீலகிரியில் டைடல் பூங்கா 1000 பேருக்கு வேலை!

நீலகிரியில் நியோ டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. குன்னூர், எடப்பள்ளிக்கு அருகே 8 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பூங்கா அமைய உள்ளது. சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த நியோ டைடல் பூங்கா, சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மகிழ்சியான செய்தியை அணைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.