News March 22, 2024
நீரின்றி அமையாது உலகு..!

நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்கள் உயிர் வாழத் தண்ணீர் அவசியம். தண்ணீரிலிருந்து தான் உயிரின தோற்றங்கள் உருவாகியதாக ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது. இயற்கையின் கொடையான தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தத் தவறினால், எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை கேள்விக்குறி தான்.!
Similar News
News April 28, 2025
பெற்றோர் விவாகரத்து: மனம் திறந்த நடிகை ஸ்ருதிஹாசன்!

பெற்றோர் விவாகரத்தால் வாழ்க்கை தலைகீழாக மாறியதாக நடிகை ஸ்ருதிஹாசன் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவரது தந்தை கமல்ஹாசன், தாயார் சரிகா இருவரும் பிரிந்தபோது ஸ்ருதிஹாசன் சரிகாவுடன் மும்பைக்கு சென்றார். ஆனால், அங்கு பெரும் சிரமத்தை அனுபவித்ததாக கூறிய அவர், BMWவில் இருந்த வாழ்க்கை லோக்கல் டிரைனுக்கு மாறியது எனத் தனது கசப்பான அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
News April 27, 2025
விஜய்யை வடிவேலு உடன் ஒப்பிட்ட ராஜேந்திர பாலாஜி

விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வரும் நிலையில்,விஜய் நடத்தியது பூத் கமிட்டி கூட்டம் போல இல்லை; பொதுக்கூட்டம் போல உள்ளது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும், 2011-ல் வடிவேலுவுக்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறவில்லை என்றும் அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்போம் என்றும் தெரிவித்தார்.
News April 27, 2025
ராக்கெட் போல மேலே வந்த MI

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இருந்த MI அணி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல் 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த இந்த அணி, 5 தொடர் வெற்றிகள் மூலம் ராக்கெட் வேகத்தில் மேலே வந்துள்ளது. MI அணியின் இந்த அசுர வளர்ச்சிக்கு என்ன காரணம் என்று கமெண்ட்டில் சொல்லுங்க.