News November 27, 2024
நாமக்கல்: 109 பணியிடங்களுக்கு 6832 பேர் விண்ணப்பம்

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் கட்டுநர்கள் பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையவழி பெறப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 97 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 5,828 விண்ணப்பங்களும் மற்றும் 12 கட்டுநர் பணியிடங்களுக்கு 1,004 விண்ணப்பங்களும் பெறப்பட்டது.
Similar News
News September 11, 2025
நாமக்கல் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால், அவற்றை பிடிப்பதற்காக மாநகராட்சி சார்பில் தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிலர் பணியாளர்களை நாய்களை பிடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இதையடுத்து, நாய்களை பிடிப்பவர்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று செப்டம்பர்.10 நாமக்கல் – ராஜ்மோகன் (9442256423), வேலூர் – ரவி ( 9498168482), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – டேவிட் பாலு ( 9486540373), திம்மன்நாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ (9994497140) ஆகியோர் உள்ளனர்.
News September 10, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 10) இரவு நேர ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் 100 என்ற எண்ணையும் அழைக்கலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.