News March 22, 2024
இரண்டு மாதத்தில் 2 மாநில முதல்வர்கள் கைது

இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இரண்டு மாதத்தில், 2 மாநில முதல்வர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நில மோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
Similar News
News January 20, 2026
இன்று ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று முதல் (ஜன.,20) தொடங்குகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் காலை 9:30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர், கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
News January 20, 2026
BREAKING: தமிழகம் முழுவதும் இன்று ஸ்டிரைக்

சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். காலமுறை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
News January 20, 2026
சென்னை வந்தடைந்தார் விஜய்!

2-வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்ற தவெக தலைவர் விஜய் நள்ளிரவு சென்னை திரும்பினார். கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு நேரில் ஆஜராகி, அவர்களது கேள்விகளுக்கான விளக்கங்களை அளித்தார். விசாரணை முடிவடைந்ததை அடுத்து, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். அவருடன் தவெக நிர்வாகிகளான நிர்மல் குமார் உள்ளிட்டோரும் வந்தனர்.


