News November 27, 2024
ஆட்சி மொழி பயிலரங்கம் தொடர்பாக கலெக்டர் தகவல்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் வருகிற டிசம்பர் 10, 11 ஆம் தேதி காலையிலும், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. எனவே அரசு ஊழியர்கள் இதில் கலந்து பயனடையுமாறு கலெக்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்!

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News August 25, 2025
வேலூர் மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க.!

வேலூர் மக்களே.. சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் கண்டிப்பாக ஒரு முறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
வேலூர்: நாளை எங்கெங்கெல்லாம் முகாம்

வேலூர் மாவட்டத்தில் நாளை (ஆக.26) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்; 1.வேலூர் மாநகராட்சி – சாலம்மாள் கல்யாண மண்டபம் சைதாப்பேட்டை. 2.பள்ளிகொண்டா – பேரூராட்சி அலுவலகம் சமுதாயக்கூடம். 3.காட்பாடி- ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் கரிகிரி.
4.அணைக்கட்டு- டி.எம்.டி மஹால் கழனிபாக்கம். 5.குடியாத்தம்- வி.பி மஹால் நெல்லூர்பேட்டை. 6.பேரணாம்பட்டு-சாந்தி ஜீவா திருமண மண்டபம் சின்ன தாமல் செருவு.