News March 22, 2024

ஈஷா யோகா மையத்தில் 6 பேர் மாயம்!

image

ஈஷா யோகா மையத்தில் கடந்த 2016 முதல் பணியாற்றிய 6 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. தென்காசியை சேர்ந்த திருமலை என்பவர் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய தனது சகோதரர் காணாமல் போனதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை துரிதப்படுத்தி விசாரித்து ஏப்ரல் 8இல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Similar News

News April 27, 2025

ராக்கெட் போல மேலே வந்த MI

image

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இருந்த MI அணி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல் 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த இந்த அணி, 5 தொடர் வெற்றிகள் மூலம் ராக்கெட் வேகத்தில் மேலே வந்துள்ளது. MI அணியின் இந்த அசுர வளர்ச்சிக்கு என்ன காரணம் என்று கமெண்ட்டில் சொல்லுங்க.

News April 27, 2025

54 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாக்., ராணுவம்!

image

ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 54 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் (Waziristan) தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இச்சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

News April 27, 2025

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் நீட்டிக்க வாய்ப்பு!

image

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் ED வழக்கில் சுப்ரீம் கோர்ட்(SC) நாளை ஜாமினை நீட்டிக்க வாய்ப்புள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜியை ED கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்.26-ம் தேதி அவருக்கு SC ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பதவியா? ஜாமினா? என முடிவெடுக்க SC கெடு விதித்திருந்தது.

error: Content is protected !!