News November 26, 2024
கனிமவள லாரிகளுக்கு ரூ.1.94 லட்சம் அபராதம்

செங்கோட்டை வழியாக கேரள மாநிலத்திற்கு 700 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. கனரக வாகனங்களில் கூடுதலாக உள்ள சக்கரங்களை சாலைகளில் இயக்காமல் அதிக அளவு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு இன்று தென்காசி ஆர்டிஓ கண்ணன், ஆய்வாளர் மணிபாரதி, போக்குவரத்துகாவல் ஆய்வாளர் மணி ஆகியோர் சோதனை நடத்தி அதில் 4 வாகனங்களுக்கு ரூ1.94 லட்சம் அபராதம் விதித்தனர்.
Similar News
News October 2, 2025
தென்காசி மக்களே., இங்கு இலவச மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள சிவகுருநாதபுரத்தில் வருகிற அக்டோபர் -04 ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகுருநாதபுரத்தில் வைத்து நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெற வேண்டி தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
News October 2, 2025
தென்காசி: டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கு <
News October 2, 2025
தென்காசி: கடைகள் ஏலம் அறிவிப்பு

தென்காசி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ள 77 கடைகளை குத்தகை உரிமம் அனுபவித்துக் கொள்ள ஆணையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஏலம் விடப்பட உள்ளது. அக்டோபர் 24, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏலம் நடைபெறும் நாளில் காலை 11 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும், 11.30 மணிக்கு ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.