News November 26, 2024
CA தேர்வு தேதியில் மாற்றம் செய்து அறிவிப்பு

தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் (14.01 2025) அன்று மத்திய அரசு நடத்தும் CA தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு மதுரை எம்.பி சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் (ஜன.14) பொங்கல் அன்று நடைபெற இருந்த பட்டயக் கணக்காளர் தேர்வை ஜனவரி 16 ஆம் தேதி மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
மதுரையில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் விரைவில் நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கு இலவச பயிற்சிகள் நடைபெறுகிறது. முதல் நிலை தேர்வு செப். 28ல் நடக்கிறது. இத்தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கோ.புதூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடந்து வருகிறது, இந்த வகுப்பில் சேர விரும்புவோர் நேரிலோ அல்லது 96989-36868 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News August 20, 2025
மதுரையில் 2000 பேருக்கு வேலை உறுதி.!

மதுரையில் வரும் சனிக்கிழமை 23.8.25 அன்று மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊராக வளர்ச்சி துறை சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 80 நிறுவனங்களிலிருந்து 2000க்கு மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை நேரில் சென்று பயன்பெறலாம்.இந்த நல்ல வாய்ப்பினை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News August 20, 2025
மதுரை: மகால் பகுதியில் புற காவல் நிலையம் திறப்பு

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூய மரியன்னை பேராலயம் அருகே புதிதாக பொதுமக்களின் நலனுக்காக புற காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் கலந்து கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பலர் உடன் இருந்தனர்.