News March 21, 2024

பலத்தை நிரூபிக்க நானே களமிறங்குகிறேன்

image

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “15க்கும் அதிகமான தொகுதிகளை பாஜகவிடம் கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. நானே களத்தில் நின்று தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க போகிறேன். இரட்டை இலையை பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். சின்னத்தை பெறுவதற்காகத் தான் தேர்தலில் களம் இறங்குகிறேன்” என்றார்.

Similar News

News October 23, 2025

BREAKING: கட்சியில் இருந்து விலகினார்

image

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், மறைந்த MLA EVKS இளங்கோவனின் நெருங்கிய நண்பருமான நாசே ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் கடலூர் (அ) மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிட விரும்பிய அவருக்கு சீட்டு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். ஈரோட்டில் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் அதிமுக, பாஜகவினர் தங்கள் கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

News October 23, 2025

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2025

வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா?

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா, இன்று 2-வது ஆட்டத்தில் களமிறங்க உள்ளது. இந்தியா வெற்றி பாதைக்கு திரும்ப விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பார்ம் ரொம்ப முக்கியம். இந்த போட்டியில் தோற்றால் சீரிஸை இழந்து விடுவோம் என்பதால் இந்திய அணி முழு திறனையும் வெளிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல.

error: Content is protected !!