News November 26, 2024

உடனே நோட் பண்ணுங்க: உதவி பெற அவசர உதவி எண்கள்

image

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அவசரகால செயற்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்திற்கு 1800-233-4233, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 04364-222588 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்திற்கு WHATSAPP எண் 94885 47941, கடலூர் மாவட்டத்திற்கு WHATSAPP எண் 94899 30520 அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர 1077 என்ற இலவச எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 19, 2025

சிவாஜிக்கு பிறகு வடிவேலு தான் சிறந்த நடிகர்: வெற்றிமாறன்

image

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு மிகப்பெரிய ஒரிஜினல் நடிகன் என்றால் அது வடிவேலு தான் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். வடிவேலுவுக்கு படிப்பும், சினிமா பின்புலமும் கிடையாது, ஆனால் ஒவ்வொரு படத்திலும் கேரக்டராகவே வாழ்வார் என அவர் கூறியுள்ளார். மேலும், வடிவேலு வெறும் காமெடி நடிகர் கிடையாது, கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

அதிமுக பொ.செயலாளர் வழக்கு.. HC உத்தரவு

image

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி EPS மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உரிமையியல் கோர்ட்டின் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து EPS சென்னை HC-ல் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப்.3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

News August 19, 2025

கணவர்களே பொண்டாட்டி பேச்சை கேளுங்க

image

மனைவியின் சொல் பேச்சை கேட்கும் கணவர்களை ‘பொண்டாட்டி தாசன்’ என்று பலரும் கிண்டல் அடிப்பது வழக்கம். ஆனால், உண்மையில் மனைவியின் கருத்தை கேட்டு நடக்கும் கணவர்கள் தான், வாழ்க்கையில் பெரியளவில் வெற்றி பெறுவதாக Harvard Business School நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கணவர்களின் சிக்கல்களை சரியாக புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வியூகங்களை வகுத்து கொடுப்பதும் மனைவிகள் தானாம்.

error: Content is protected !!