News March 21, 2024
கவிதாவை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் ₹100 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News April 29, 2025
எல்லாத்தையும் அடமானம் வச்சிட்டேன்.. நடிகர் நானி

ஹிட் 3 படத்திற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டதாக நடிகர் நானி தெரிவித்துள்ளார். படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நானி, இந்தப் படத்திற்காக நான் தயாரித்த கோர்ட் படம் உள்பட எல்லாவற்றையும் அடமானம் வைத்துவிட்டேன்; இனியும் வேண்டுமென்றால் ராஜமௌலி-மகேஷ்பாபு படத்தை தான் அடமானம் வைக்க வேண்டும் என்று நகைச்சுவையாக பேசினார். இதைக்கேட்டு இயக்குனர் ராஜமௌலி சிரித்தார்.
News April 29, 2025
அமெரிக்கா யார் பக்கம்? நிபுணர்கள் கணிப்பு

இந்தியா-பாக். இடையே போர் மூண்டால், USA இந்தியாவுக்கு ஆதரவாக நிற்குமென ராஜீய நிபுணர்கள் கணித்துள்ளனர். 1971 இந்தியா-பாக். போரின் போது USA, பாக்.-க்கு ஆதரவளித்தது. இந்நிலையில், இந்தியா குவாட் அமைப்பில் இருப்பதாலும், சீனா-பாக். இடையே நல்லுறவு நீடிப்பதாலும், USA இந்தியாவை பகைக்காது என்கின்றனர். அதேசமயம் தெற்காசியாவில் இந்தியா வலிமையடைவதை USA விரும்பாது என்றும் இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.
News April 29, 2025
PM கிஷான் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்க முடிவு!

மத்திய அரசின் ‘PM கிஷான்’ உதவித்தொகையின் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். 19-வது தவணை ₹2000 கடந்த பிப்.24-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்ட நிலையில், 20-வது தவணையை ஜூன் மாதம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 18-வது தவணை அக்டோபரிலும், 17-வது தவணை ஜூன் 2024லும் வழங்கப்பட்டது.