News March 21, 2024

உச்சநீதிமன்றம் ஆளுநரின் தலையில் கொட்டியுள்ளது

image

உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு சரியான கொட்டு வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், அதை பற்றி அவர் கவலைப்பட மாட்டார். தலையில் எவ்வளவு கொட்டினாலும் அவருக்கு வலிக்காது. அவர் இரும்பு தலையர். ஆளுநரின் நடவடிக்கை கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது அவரின் நடத்தைக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.

Similar News

News November 8, 2025

ரெய்னா, தவானுக்கு சமூக பொறுப்பு உள்ளதா?

image

சூதாட்ட செயலிகள் விளம்பரத்தில் நடித்ததற்காக <<18217110>>ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா<<>> சொத்துகளை நேற்று ED முடக்கியது. இதை குறிப்பிட்டு, இந்த பிரபலங்களுக்கு சமூக பொறுப்பு என்பது உண்மையில் இருக்கிறதா என ஹைதராபாத் கமிஷனர் V.C.சஜ்ஜனார் கேள்வி எழுப்பியுள்ளார். சூதாட்ட செயலிகளை புரொமோட் செய்து, பலர் தற்கொலை செய்து கொள்ள இந்த பிரபலங்களே காரணமாக உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

News November 8, 2025

ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள்

image

ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள் பணியாற்றி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது. ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் வேலை என அழைத்து செல்லப்படும் இந்தியர்கள், அங்கு ராணுவ உதவியாளர்களாக சேர்க்கப்படுகின்றனர்.

News November 8, 2025

வந்தே மாதரத்தை பாடாதவர்கள் கேள்வி கேட்பதா? கார்கே

image

வந்தே மாதரத்தை பாடாத RSS-காரர்கள், இன்று தேசியத்தின் காவலர்களாக காட்டிக் கொள்வது விந்தையாக இருப்பதாக காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். வந்தே மாதரம் பாடலின் முக்கிய வரிகளை நீக்கி, நாட்டு பிரிவினைக்கு காங்., வித்திட்டதாக மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு இவ்வாறு பதிலளித்துள்ள கார்கே, RSS ஷாகா, அலுவலகங்களில் தேசிய கீதமான ஜன கண மன, வந்தே மாதரம் இரண்டையும் பாடியதே இல்லை என விமர்சித்தார்.

error: Content is protected !!