News November 25, 2024

நோய் பரவலை தடுக்க முக கவசம் அணிய -ஆட்சியர் தகவல்

image

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதனால் எலி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காய்ச்சல் சளி இருப்பவர்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தகுந்த சிகிச்சை பெறவும் முக கவசம் அணியவும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிவுறுத்தினார் .

Similar News

News October 2, 2025

தென்காசி மக்களே., இங்கு இலவச மருத்துவ முகாம்

image

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள சிவகுருநாதபுரத்தில் வருகிற அக்டோபர் -04 ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகுருநாதபுரத்தில் வைத்து நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெற வேண்டி தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

News October 2, 2025

தென்காசி: டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகலவை உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News October 2, 2025

தென்காசி: கடைகள் ஏலம் அறிவிப்பு

image

தென்காசி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ள 77 கடைகளை குத்தகை உரிமம் அனுபவித்துக் கொள்ள ஆணையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஏலம் விடப்பட உள்ளது. அக்டோபர் 24, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏலம் நடைபெறும் நாளில் காலை 11 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும், 11.30 மணிக்கு ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!