News November 25, 2024
SHOCK NEWS: ஜிபே, போன் பே மூலம் ரூ.1,087 கோடி மோசடி

ஜிபே, போன் பே உள்ளிட்ட யுபிஐ மூலம் நாட்டு மக்களிடம் ரூ.1,087 கோடி மோசடி நடந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையில் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-2024 நிதியாண்டில் 13.42 லட்சம் மோசடிகள் நடந்துள்ளதாகவும், ரூ.1,087 கோடி சுருட்டப்பட்டு உள்ளதாகவும் கூறினார். இது கடந்தாண்டுடன் (ரூ.573 கோடி) ஒப்பிடுகையில் 85% அதிகமெனவும் குறிப்பிட்டார்.
Similar News
News August 19, 2025
ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹73,880-க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹9,235-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,26,000-க்கும் விற்பனையாகிறது.
News August 19, 2025
ஆசிய கோப்பை: இந்திய அணி இன்று அறிவிப்பு

2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. சுப்மன் கில் அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என கூறப்படுகிறது. டி20 ஃபார்மெட்டில் வரும் செப்டம்பர் 9-ம் தேதி துபாய் மற்றும் அபுதாபியில் இந்த போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியா vs பாகிஸ்தான் மோதும் போட்டிகள் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது.
News August 19, 2025
BREAKING: கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் அன்புமணி

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க, ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு தைலாபுரம் தோட்டத்தில் சற்றுநேரத்தில் கூடுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணிக்கு, ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அவரது தரப்பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், அவர் மீது நடவடிக்கை பாய உள்ளது.