News March 21, 2024
இந்தியா கூட்டணி மாவட்ட ஆட்சியர் சந்தித்து புகார் மனு

காரைக்காலில் இன்று இந்தியா கூட்டணி கட்சி சார்பில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், திமுக எம்.எல்.ஏ நாஜிம், காங்கிரஸ் முன்னால் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிடோர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மணிகண்டனை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் பணியில் ஆளுங்கட்சியினருக்கு காவல்துறை ஆதரவாக செயல்படுவதாக புகார் மனு அளித்தனர்.
Similar News
News October 26, 2025
சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி அறிவுறுத்தல்

பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் முன் பாதுகாப்பு அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஆப் மூலம் உடனடி கடன் மற்றும் குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி, உங்கள் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால், அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நித்யா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
News October 26, 2025
புதுவை: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

கேஸ் மானிய பணம் வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்ங்க..
News October 26, 2025
புதுச்சேரி: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளால் வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன், விபத்துளில் சிக்குகின்றனர். கால்நடைகளை சாலைகளில் திரியவிடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் கால்நடைகளை பிடித்து அபராத தொகை ரூ.5 ஆயிரம் உரிமையாளர்களிடம் வசூல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


