News March 21, 2024

புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. எனவே வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்த புகார்களை 9655220100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 17, 2026

பவானிசாகர் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

பவானிசாகர் அடுத்த பாகுதம்பாளையம், பாரதி நகர் பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த, பப்பண்ணன் (58) என்பவரை, பவானிசாகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 26 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பவானிசாகர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

புளியம்பட்டி: மது விற்றவர் கைது!

image

திருவள்ளுவர் தினமான நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கல்ராமனி குட்டையில், புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு நபர் மது பாட்டில்களை விற்பனை செய்ததை கண்டனர். விசாரணையில் கணக்கரசம்பாளையத்தை சேர்ந்த காளிமுத்து என்பது, மது பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிந்ததது. போலீசார் அவரை கைது செய்தனர்.

News January 17, 2026

புளியம்பட்டி: மது விற்றவர் கைது!

image

திருவள்ளுவர் தினமான நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கல்ராமனி குட்டையில், புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு நபர் மது பாட்டில்களை விற்பனை செய்ததை கண்டனர். விசாரணையில் கணக்கரசம்பாளையத்தை சேர்ந்த காளிமுத்து என்பது, மது பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிந்ததது. போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!