News November 25, 2024
தமிழகத்தில் புயல் கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர, சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
தெருநாய்களை கொல்வதாக தேர்தல் வாக்குறுதி!

தெலங்கானாவில் சமீபத்தில் கிராம பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தெருநாய்களை கொல்வோம் என பல வேட்பாளர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். தற்போது வெற்றி பெற்றதும், தெருநாய்களை பஞ்சாயத்து தலைவர்கள் தேடி தேடி கொன்று வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News January 14, 2026
இந்திய விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் டிரம்ப்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதல் வரிவிதிக்கப்படும் என <<18842996>>டிரம்ப்<<>> அறிவித்துள்ளார். இதனால் இந்திய விவசாயிகள், அரசி ஏற்றுமதியாளர்கள் கடுமையான பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது. ஈரான் அதன் மொத்த அரசி தேவையில், மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவிடம் வாங்குகிறது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களில் அனுப்பப்பட்ட அரிசிக்கான பணம் இன்னும் வந்து சேரவில்லை என ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
News January 14, 2026
ஜனவரி 14: வரலாற்றில் இன்று

*போகி பண்டிகை. *1761 – 3-ம் பானிபட் போர் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதில் ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. *1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. *1951 – ஓ. பன்னீர்செல்வம் பிறந்தநாள்.


