News November 25, 2024
ஆலங்குளம்: கேரள கனிமவள லாரிகள் மீது கல் வீசி தாக்குதல்

ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூரில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில் நேற்று(நவ.,24) கேரள மாநில பதிவெண்கள் கொண்ட லாரிகள் எம்சாண்ட் ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் ஏற்றி கேரளாவுக்கு சென்றன. மருதமுத்தூரை அடுத்த ராம் நகரில் லாரிகள் சென்றபோது 2 இளைஞர்கள் கல் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் லாரியின் கண்ணாடி சேதமடைந்தது. 2 இளைஞர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 13, 2025
தென்காசி: மமக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை

தென்காசி நகர மனித நேய மக்கள் கட்சி 15வது வார்டு கிளை பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று காலையில் நடந்தது. இதில் நகர தலைவர் அபாபீல் மைதீன் தலைமை வகித்து, நகர செயலாளர், பொருளாளர் மற்றும் நகர துணை அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்தனர்.
News August 13, 2025
தென்காசி: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 அரசு மானியம்….APPLY!

தென்காசி மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. இந்த <
News August 13, 2025
தென்காசி: இங்கெல்லாம் இன்று மின்தடை

தென்காசி மாவட்டத்தில் இன்று (ஆக.13) பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது. மற்றவர்களுக்கு SHARE பண்ணி அவுங்க பணிகளை வேகமாக முடிக்க சொல்லுங்க!