News November 25, 2024

ஈரோடு அருகே மின்தடை அறிவிப்பு

image

பவானி அடுத்த கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (நவ.26) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், பெருமாபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, குஞ்சரமடை, பெருந்தலையூர், கருக்கம்பாளையம், அய்யம்பாளையம், வெள்ளாங்கோவில், தங்கமேடு, ஆப்பக்கூடல் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News

News December 1, 2025

கோபி: செங்கோட்டையனுடன் இணைந்தனர்!

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து அக்கட்சியில் இருந்து விலகி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அபிஷேக் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.

News December 1, 2025

குண்டேரிப்பள்ளம் அணையில் மீன் பிடி உரிமைக்கு மின்னணு ஒப்பந்தம்

image

ஈரோடு மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குண்டேரிப்பள்ளம் நீா்த்தேக்கத்தின் மீன் பிடி உரிமையை 5 ஆண்டு காலத்துக்கு மீன் பிடி குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப் புள்ளி வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளங்கள்,மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணையதள மூலமாக டிச 10 தேதிக்குள் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

News December 1, 2025

ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவையில், உட்கோட்ட அதிகாரிகளை வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவசர சேவை வழங்கப்படும் என காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!