News November 25, 2024
கந்தர்வகோட்டை அருகே சரக்கு வாகனம் மோதி சிறுவன் பலி

கந்தர்வகோட்டை பெரிய கோட்டையை சேர்ந்தவர் கலைச்செல்வன் இவரது மகன் 4 வயது ஆண் குழந்தை நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார் வீரடிப்பட்டி சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த மகேந்திரா பொலிரோ வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சாய்பிரணவ் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
புதுகை: தனியார் பள்ளி வேன் மோதி ஒருவர் பலி

தஞ்சாவூரை சேர்ந்தவர் விஜய் (25). இவருக்கும், புதுக்கோட்டை முதலிப்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (22) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் விஜய் நேற்று காலை முதலிப்பட்டியில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு அவரது ஊருக்கு பைகில் சென்றபோது, தனியார் பள்ளி வேன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
News December 6, 2025
புதுகை: தனியார் பள்ளி வேன் மோதி ஒருவர் பலி

தஞ்சாவூரை சேர்ந்தவர் விஜய் (25). இவருக்கும், புதுக்கோட்டை முதலிப்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (22) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் விஜய் நேற்று காலை முதலிப்பட்டியில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு அவரது ஊருக்கு பைகில் சென்றபோது, தனியார் பள்ளி வேன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
News December 6, 2025
புதுகை: காரில் வந்து ஆடுகள் திருட்டு!

புதுகை, ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டிப்பத்திரம் கண்மாய்க் கரைப்பகுதி மற்றும் ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் கிராமங்களைச் சேர்ந்த சுந்தரம், சித்திரவள்ளி, பேச்சிமுத்து, பழனியாயி ஆகிய 4 பேரின் 10 ஆடுகள் டிச.04 இரவு திருடு போயுள்ளது. இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு, இரவு நேரங்களில் கார்களில் வரும் திருடர்கள் ஆடுகளை திருடிச் செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.


