News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 14, 2025
ஜீரண சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்!

உடலின் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் சீமை சாமந்தி தேநீர் உதவும்.
★சாமந்திப்பூ இதழ்களைப் பிரித்து நன்கு காய வைக்கவும்.
★1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 தேக்கரண்டி உலர்ந்த பூக்களை போடவும்.
★8- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
★அதை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கொஞ்சம் தேன் கலந்து கொண்டால், சத்தான சீமை சாமந்தி தேநீர் ரெடி. SHARE IT.
News September 14, 2025
7 மாவட்டங்களில் மழை தொடரும்: IMD

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 14, 2025
உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்..!

அவசர அவசரமாக உணவை சாப்பிடக் கூடாது, அப்படி செய்தால் செரிமான பிரச்னை ஏற்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். சாப்பாட்டிற்கு குறைந்த நேரமே செலவிட்டால், உங்களது உடல் எடை அதிகரிக்கலாம் என எச்சரிக்கின்றனர். நன்றாக மெல்லாமல் வேகமாக சாப்பிடுவது, நீங்கள் அதிகமாக சாப்பிட்டது போன்ற உணர்வை கொடுக்குமாம். உண்பதற்கு அரை மணி நேரம் வரை எடுத்துக் கொண்டால் அனைத்து சத்துகளும் உடலுக்கு கிடைக்குமாம். SHARE IT.