News March 21, 2024
PIC OF THE DAY

அம்பேத்கர் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தார் என்பது நமக்கு தெரிந்தது தான். இன்று, அதேபோல் சிறுவன் ஒருவன் தெருவிளக்கு வெளிச்சத்தில் படிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, ‘கல்வி இல்லாத குழந்தைகள், சிறகு இல்லாத பறவைகள் போல’ என குறிப்பிட்டுள்ளார். அரசு கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
செங்கோட்டையன் திமுகவில் இணைகிறாரா? தவெக பதிலடி!

செங்கோட்டையனை திமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக SM-ல் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இது தொடர்பாக அவரது தரப்பிடம் பேசினோம், இந்த தகவல் முற்றிலும் வதந்தி என மறுப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக தவெக நிகழ்ச்சிகளை KAS புறக்கணித்து வருவதாக பேசப்பட்ட விவகாரத்திற்கும் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று மறைமுகமாக பதிலளித்துள்ளதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது.
News March 8, 2026
ஜனாதிபதியை பாஜக தவறாக பயன்படுத்துகிறது: மம்தா

மேற்குவங்கம் சென்ற தன்னை அம்மாநில CM வரவேற்கவில்லை என <<19325512>>ஜனாதிபதி திரெளபதி முர்மு <<>>கூறியது சர்ச்சையானது. இதுகுறித்து பேசிய CM மம்தா பானர்ஜி, மத்திய பிரதேசம் & சத்தீஸ்கரில் பழங்குடியினருக்கு எதிராக அட்டூழியங்கள் நடந்தபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என முர்முவுக்கு கேள்வி எழுப்பினார். பாஜக தனது சொந்த ஆதாயத்திற்காக ஜனாதிபதியை அவமதித்து தவறாக பயன்படுத்துவது தவறானது எனவும் சாடியுள்ளார்.
News March 8, 2026
மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்: அன்புமணி

ஜனாதிபதி திரவுபதி முர்முவை அற்ப அரசியல் காரணங்களுக்காக மேற்கு வங்க CM அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி சாடியுள்ளார். <<19325512>>நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியான முர்முவை அவமதிப்பது<<>> ஒட்டுமொத்த பெண் குலத்தையும், பழங்குடியினரையும் அவமதிக்கும் செயல்; இதற்காக ஜனாதிபதியிடமும், சந்தாலி பழங்குடியினரிடமும் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


