News November 24, 2024
உத்தரப் பிரதேச கலவரத்தில் 3 பேர் பலி

உத்தரப் பிரதேச கலவரத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். சம்பலில் உள்ள பழமையான மசூதி, இந்து கோயில் மீது கட்டப்பட்டு இருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு உள்ளது. இதில் கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றபோது, அப்பகுதியினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசாருக்கும் அப்பகுதியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. 30 போலீசாரும் காயமடைந்தனர்.
Similar News
News October 25, 2025
செல்வப்பெருந்தகையின் பேச்சு வருத்தம் அளிக்கிறது: அமைச்சர்

செம்பரம்பாக்கம் ஏரியை அத்தொகுதியின் MLA ஆன தன்னிடம் சொல்லாமல் திறந்ததற்காக நீர்வளத்துறை அதிகாரிகளை <<18077962>>செல்வப்பெருந்தகை<<>> சாடினார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை போன்ற கட்சி தலைவர்கள் கடுமையான பேசியது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். உண்மையை தெரிந்து கொண்டு அவர் பேச வேண்டும் எனவும், சின்ன சின்ன நீர் திறப்புகளுக்கு எல்லாம் MLA-வை கூப்பிடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
News October 25, 2025
இந்தியா அழுத்தத்திற்கு பணியாது: பியூஷ் கோயல்

அழுத்தத்திற்கு பணிந்து அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் அணுகுமுறை நீண்டகால தொலைநோக்கு பார்வையை கொண்டது எனவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வரிவிதிப்பை கடந்து செயலாற்றுவது எப்படி என யோசித்து வருவதாகவும், புதிய சந்தைகளை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
ராசி பலன்கள் (25.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


