News November 24, 2024
சவுக்கு தோப்பில் கிடந்த மனித எலும்பு கூடு

கன்னியாகுமரி மண்டைக்காடு கூட்டுமங்கலம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சவுக்கு தோட்டம் அருகே கடற்கரையில் இன்று மனித உடல் பாகங்கள் அழுகி சிதைந்த நிலையில் எலும்பு கூடு கிடந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் சவுக்கு தோப்பில் கிடந்த எலும்பு கூட்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 7, 2025
இடைநிலை துணை தேர்வு சான்றிதழ் பெற அறிவுறுத்தல்

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தியில்;2021 இடைநிலை துணைத்தேர்வு மற்றும் மே.2022 பொதுத்தேர்வு / ஆக.2022 இடைநிலை துணைத் தேர்வு வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித் தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய நுழைவுச் சீட்டுடன் நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
News August 7, 2025
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர தேதி நீட்டிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை 19.06.25 முதல் நடைபெற்று வருகிறது. நேரடி மாணவர் சேர்க்கை மூலம் சேர்க்கை பெற கால அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ-யில் தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அழகுமீனா இன்று (ஆக.7) தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
ஐதராபாத் – கன்னியாகுமரி ரயில் அக்.10ம் தேதி வரை நீடிப்பு

குண்டூர், திருப்பதி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் திருச்சி, மதுரை வழியாக இயங்கும் வண்டி எண்: 07229/30 கன்னியாகுமரி – ஹைதராபாத் வாரந்திர சிறப்பு ரயில் 10.10.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் இன்று (ஆக.7) தெரிவித்துள்ளனர். இது ரயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.