News November 24, 2024
SDPI கட்சியின் மாநில தலைவராக மீண்டும் நெல்லை முபாரக் தேர்வு

SDPI கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியும் இன்று (நவ.24) நடைபெற்றது. தமிழக தலைவராக மேலப்பாளையத்தைச் சேர்ந்த நெல்லை முபாரக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
நெல்லை: தலைமை செயலகத்தில் வேலை..இன்றே கடைசி

தமிழ்நாடு தலைமை செயலகம் மற்றும் நிதி பிரிவில் காலியாக உள்ள உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 32 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <
News November 5, 2025
நெல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

களக்காடு கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடன் கொடுக்கல் வாங்கல் சம்பவத்தில் வழிமறித்து தவசிக்கனி என்பவர் அறிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நாங்குநேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தவசிக்கனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News November 5, 2025
நெல்லை: பேராசிரியர் மீது கல்லூரி மாணவி புகார்

பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர், தனது துறை பேராசிரியர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கல்லூரி நிர்வாகம் அவருக்கு துணை போவதாகவும் மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


