News November 24, 2024
VAO வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

பேட்டை காந்திநகர் ஐஓபி காலனி தெருவை சேர்ந்த VAO அந்தோணி தங்கராஜ் என்பவர் வீட்டில் கடந்த 6 ஆம் தேதி 51 பவுன் நகை திருடுபோனது. இது குறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. கேரளா விரைந்த போலீசார் மதனராய் என்ற வாலிபரை கைது செய்தனர்.
Similar News
News October 20, 2025
நெல்லை: கரண்ட் கட்டா? கவலை வேண்டாம்

நெல்லை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 20, 2025
நெல்லை: தீபாவளி மகிழ்ச்சி தொடரும் எண்கள் இதோ!

நெல்லை மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலைய எண்கள் திருநெல்வேலி (0462-2330101), பேட்டை (2342003), அம்பை (04634-250399), சேரன்மகாதேவி (260569), கங்கைகொண்டான் (04622-486500) மற்ற பகுதிகளின் எண்களுக்கு இங்கு <
News October 20, 2025
நெல்லை: நவம்பர் 3ம் தேதி வரை தடை உத்தரவு

திருநெல்வேலி மாநகரில் இன்று அக்டோபர் 19 நள்ளிரவு 12 மணி முதல் வருகிற நவம்பர் மூன்றாம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவின் படி பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா போன்றவை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.