News November 24, 2024

தடையை மீறி தீபம் ஏற்றியவர்களுக்கு ஜாமின்

image

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தடையை மீறி கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றியதாக கடந்த வாரம் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் திருப்பரங்குன்றம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான 8 பேரும் ஜாமினில் இன்று வெளிவந்தனர். அவர்களுக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

Similar News

News October 23, 2025

மதுரை: அதிகமா கரண்ட் பில் வருதா? இத பண்ணுங்க

image

மதுரை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News October 23, 2025

மதுரை: குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு

image

மதுரை மக்களே, அக்.1 முதல் 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு ஆதாரில் கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை; இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப் போன்ற அரசு உதவிகளை பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. உடனே UPDATE பண்ணுங்க; இந்த தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க

News October 23, 2025

மதுரை அருகே 8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

image

சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கரட்டுப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கருப்பட்டி பிரிவு அருகே கரூர், வெங்கமேட்டை சேர்ந்த தங்கவேல் மகன் சதீஷ்குமார் 28, சந்தேகத்திற்கிடமான வகையில் காருடன் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்ததில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மேல் விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!