News November 24, 2024
பஞ்சாப் கேப்டன் ஆகிறாரா ஷ்ரேயஸ் ஐயர்!

IND வீரர் ஷ்ரேயஸ் ஐயரை ஐபிஎல் மெகா ஏலத்தில் PBKS அணி ₹26.75 கோடிக்கு வாங்கியது. அவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப், டெல்லி அணிகள் கடுமையாக போட்டி போட்டன. 2 இந்திய வீரர்களை மட்டுமே தக்கவைத்து மெகா ஏலத்திற்கு வந்த PBKS அணிக்கு முதலில் தேவைப்பட்டது ஒரு நல்ல கேப்டன் தான். இதனால் தான் கடுமையான போட்டிக்கு நடுவிலும் அவரை வாங்கியது. 2024லில் கோப்பையை வென்ற KKR அணி கேப்டன் ஷ்ரேயஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 18, 2025
பாஜக எதிர்பார்க்கும் தொகுதிகள் எத்தனை?

2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளை குறிவைத்துள்ளது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றிபெற வாய்ப்புள்ள 35 தொகுதிகளை பாஜக தேர்வு செய்துள்ளதாம். இம்மாத இறுதியில் மீண்டும் தமிழகம் வரும் பாஜக அமைப்பு பொ.செ., பிஎல் சந்தோஷ் இதுபற்றி EPS-யிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தமுறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4-ல் வென்றது.
News August 18, 2025
CPR-யை பாஜக தேர்வு செய்தது ஏன்? பின்னணியில் புது கணக்கு

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக CP. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை கணக்கிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொங்கு பகுதிக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை மக்கள் மனதில் பதியவைத்தால், இப்பகுதியில் ஏற்கனவே வலுவாக உள்ள அதிமுக, பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
News August 18, 2025
ஆகஸ்ட் 18: வரலாற்றில் இன்று

1945 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம்.
1954 – தமிழக அரசியல்வாதி வி.கே.சசிகலா பிறந்ததினம்.
1928 – சென்னை மியூசிக் அகடாமி துவக்கமானது.
1227 – மங்கோலிய பேரரசர் செங்கிஸ்கான் மறைந்த தினம்.
1920 – அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம் அதிகாரப்பூர்வமானது.