News March 21, 2024
+2 பொதுத்தேர்வு நாளையுடன் நிறைவு

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள், நாளையுடன் (மார்ச் 22) நிறைவடைகிறது. தேர்வுகள் எளிமையாக இருந்ததால் பலர் சதம் அடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நாளை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 6ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்.
Similar News
News April 27, 2025
செந்தில் பாலாஜி இன்று ராஜினாமா?

அமைச்சர் பதவியை இன்று மாலை (அ) நாளை காலை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மோசடி வழக்கில் அமைச்சர் பதவியா, ஜாமீனா என முடிவெடுக்க நாளை வரை SC கெடு விதித்தது. இதை சுட்டிக்காட்டிய திமுக வட்டாரங்கள், ஜாமீனை தக்க வைக்க பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய உள்ளார், கோவையில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு பிறகு அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறுகின்றன.
News April 27, 2025
தேமுதிக முக்கிய முடிவு : பிரேமலதா பிளான் என்ன?

வருகிற 30-ம் தேதி பாலக்கோட்டில் நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் ADMK – BJP கூட்டணி உருவாகியுள்ள நிலையில், 2026 தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா தலைமையில் முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுகவுடன் உரசல் இருப்பினும், பாஜகவை அண்மையில் தேமுதிக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
News April 27, 2025
தமிழ் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம்

தமிழ் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநரும், நடிகருமான மனோஜ் குமார் அண்மையில் காலமானார். இதேபோல், நடிகர் நாகேந்திரன் நேற்று திடீரென மரணமடைந்தார். மேலும் நடிகர்கள் கராத்தே ஹூசைனி, ரவிகுமார், நடிகை பிந்து கோஸ், இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி, தயாரிப்பாளர் ராமநாதன், டிவி நடிகர் யுவராஜ் நேத்ரன் ஆகியோரும் அண்மையில் மரணமடைந்தனர்.