News November 24, 2024

பாகிஸ்தான் கலவரத்தில் 82 பேர் பலி

image

பாகிஸ்தானில் கடந்த 3 நாள்களாக நடந்து வரும் கலவரத்தில் இதுவரை 82 பேர் பலியாகியுள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியர்கள் 2 பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஷியா பிரிவினரை சன்னி பிரிவினர் தாக்கியதால் கலவரம் வெடித்தது. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு போலீசார் திணறி வருகின்றனர்.

Similar News

News October 25, 2025

NATIONAL ROUNDUP: தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

image

*ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளன. *காற்று மாசு அதிகரிப்பால், டெல்லியில் காற்று சுத்திகரிப்பான், முகக்கவசம் விற்பனை அதிகரித்துள்ளது. *ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
* ₹256 கோடி போதைப்பொருளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

News October 25, 2025

உலகின் 8-வது கண்டம் தெரியுமா?

image

உலகின் 8வது கண்டத்தை புவியியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நியூசிலாந்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நிலப்பரப்பின் பாறை மாதிரிகளை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருப்பதாகவும், புதிய கண்டத்தின் 94% பகுதிகள் நீருக்குள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மொத்தமாக 49 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த கண்டத்துக்கு Zealandia என்றும் பெயர் வைத்துள்ளனர். SHARE IT

News October 25, 2025

கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மத்திய அரசு நிதி

image

கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, மத்திய அரசு தரப்பில் ₹2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களின் வங்கி கணக்கில் ₹2 லட்சத்தை மத்திய அரசு செலுத்தியுள்ளது. ஏற்கெனவே TN அரசு ₹10 லட்சமும், விஜய் ₹20 லட்சமும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!