News November 24, 2024
IPL Auction: ₹10.75 கோடிக்கு வாங்கப்பட்ட ரபாடா

தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, நடைபெற்ற ஏலத்தில் ₹10.75 கோடிக்கு GT அணியால் வாங்கப்பட்டுள்ளார். மும்பை அணி அவருக்காக முதலில் Bidding’ஐ தொடங்கிய நிலையில், பெங்களூரு அணியும் முயற்சித்தது. இறுதியில் குஜராத் அணி 10.75 கோடிக்கு அவரை வாங்கியது. இதுவரை 80 மேட்சில் விளையாடி, 117 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ரபாடா. Stay tuned with Way2News for IPL live Auction Updates….
Similar News
News August 15, 2025
ராசி பலன்கள் (15.08.2025)

➤ மேஷம் – பக்தி ➤ ரிஷபம் – பாசம் ➤ மிதுனம் – பயம் ➤ கடகம் – பகை ➤ சிம்மம் – விவேகம் ➤ கன்னி – பாராட்டு ➤ துலாம் – பிரீதி ➤ விருச்சிகம் – உயர்வு ➤ தனுசு – வரவு ➤ மகரம் – தடங்கல் ➤ கும்பம் – வெற்றி ➤ மீனம் – இன்சொல்.
News August 15, 2025
ஆபரேஷன் சிந்தூர் வரலாற்றில் நிலைத்திருக்கும்: ஜனாதிபதி

இந்திய ஜனநாயகம் பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர், இந்திய அரசியலமைப்பு உலகத்திற்கு தேவையான மாடல் என கூறியுள்ளார். மேலும், இந்திய ராணுவம் எந்த சூழலையும் சமாளிக்கும் என்பது ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிரூபித்துள்ளதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமாக அது வரலாற்றில் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 15, 2025
சீனாவுடன் எல்லை வழி வர்த்தகத்தை தொடங்க முடிவு

5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சீனா உடனான எல்லை வழி வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் எல்லை வழியாக வர்த்தகத்தை தொடங்க சீன தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 கல்வான் மோதலுக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.