News November 24, 2024

135 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்

image

திருவாடானை தாலுகாவில் இன்று 135 வாக்குச் சாவடிகளுக்கு 71 மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் 135 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் 13 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். முகாம்களில் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை ஆர்வத்துடன் சேர்ப்பதற்கு உரிய படிவங்களை வழங்கினர். அதேபோல் திருத்தம் மற்றும் நீக்கம் போன்றவற்றிற்கும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Similar News

News August 23, 2025

ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 23, 2025

நான் முதல்வன் திட்டத்தில் 123 மாணவர்கள் உயர் கல்வி பயன்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி துறை, வேலைவாய்ப்பு துறை சார்பில் நான் முதல்வன்- உயர்வுக்கு படி திட்ட 3 சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. கடந்த 2 சிறப்பு முகாம்கள் மூலம் 110 மாணவ, மாணவியர் உயர் கல்வியில் சேர்ந்து பயன் பெற்றுள்ளனர். நேற்றைய (ஆக.22) முகாமில் 123 மாணவ, மாணவியர் பங்கேற்று 79 மாணவ, மாணவியர் பயன் பெற்றுள்ளனர். என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News August 23, 2025

ராமேஸ்வரம் ரயிலில் போலீஸ் டிக்கெட் பரிசோதகர் கைது

image

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16617) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெயிலின் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டது. அவர் போலியான நபர் எனக்கு தெரிய வந்தபோது அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை.

error: Content is protected !!