News November 24, 2024

நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை

image

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (25.11.24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழையும் கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Similar News

News October 16, 2025

சுற்றுலா செல்ல சிறந்த 10 நாடுகள் இதுதான் PHOTOS

image

‘எந்நாடு என்றாலும் நம் நாட்டை போல வருமா’ என்பதற்கிணங்க நமது நாடு நமக்கு எப்போதுமே சிறந்தது தான். அதை விட்டுக்கொடுக்க போவதில்லை. இருப்பினும், வேறு சில சிறந்த நாடுகள் எதுவென தெரிந்து கொள்வதில் தவறில்லை. இயற்கையான அழகுகளை அடிப்படையாக கொண்டு Forbes வெளியிட்ட உலகின் சிறந்த 10 நாடுகளை மேலே swipe செய்து பாருங்கள். அவற்றில் நீங்கள் செல்ல வேண்டும் என நினைக்கும் நாட்டின் பெயரை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 16, 2025

’கிட்னிகள் ஜாக்கிரதை’ பேட்ஜை அணிந்து வந்த அதிமுகவினர்

image

கரூர் துயரத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று கருப்பு பட்டை அணிந்து அதிமுகவினர் பேரவைக்கு வந்திருந்தனர். இந்நிலையில், இன்று ’கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக MLA-க்கள் பேரவைக்கு வந்துள்ளனர். மேலும், அன்புமணி தரப்பு பாமக MLA-க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். சட்டமன்ற குழு தலைவர் & கொறடாவை மாற்ற கோரிய மனுவை பரிசீலிக்காததால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News October 16, 2025

மடகாஸ்கரில் ராணுவ ஆட்சி

image

அரசுக்கு எதிரான Gen Z போராட்டத்தால், மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடினார். இதனையடுத்து, அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த ஆட்சி கவிழ்ப்பை வழிநடத்திய ராணுவ தளபதி ராண்ட்ரியானிரினா புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) மடகாஸ்கரை, கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்துள்ளது.

error: Content is protected !!