News November 24, 2024
1 கிலோ பூண்டு ரூ.450 ரூபாய்க்கு விற்பனை

சென்னை, கோயம்பேடு சந்தையில் 1 கிலோ பூண்டு ரூ. 450க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 1 கிலோ ரூ.420 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது வரத்து குறைந்துள்ளதால் 30 ரூபாய் அதிகரித்து இன்று 1 கிலோ ரூ.450க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திடீர் வெளியேற்றத்தால், வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு, கிலோ கணக்கில் வாங்க முடியாமல் கிராம் கணக்கில் வாங்கிச் சென்றனர்.
Similar News
News September 3, 2025
சென்னையில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 3, 2025
சென்னையில் புதிய மெட்ரோ பாதை!

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.1963.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. 13 ரயில் நிலையங்களுடன் சுமார் 15 கி.மீ-க்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
News September 3, 2025
சென்னையில் இனி உங்களுக்கு அலைச்சலே இல்லை!

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான அரசு சேவைகளை பெற நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டாம். பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், கடை வாடகை செலுத்துவது, செல்லப்பிராணிகளை பதிவு செய்வது, சொத்து வரி செலுத்துவது, தொழில் வரி செலுத்துவது, சமூக நல கூடங்களை புக் செய்வது, இறப்பு சான்றிதழ், மாநகராட்சி சார்ந்து புகார் செய்வது உள்பட 34 சேவைகளை <