News November 24, 2024

வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

image

திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்லும் பயணிகளை இன்று டிஆர்ஐ திருச்சி & சிஐயு, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஸ்ரீ ஹமீத் பாசித் மற்றும் சிங்கப்பூர் செல்லும் ஸ்ரீ முகமது முஸ்தபா ஆகிய இரண்டு பயணிகளின் உடைமையில் ரூ.11,14,556/- & ரூ.12,26,900/- மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 12, 2026

திருச்சி அருகே 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்!

image

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில் என பல்வேறு பிரசித்த பெற்ற தலங்கள் அமைந்துள்ளன. அந்த வரிசையில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலும் அடங்கும். சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலானது சுமார் 275 பாடல் பெற்ற தலமாகவும், ‘பஞ்ச பூத ஸ்தலங்களில்’ ஒன்றாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இதனை SHARE பண்ணுங்க.

News January 12, 2026

திருச்சி: EMI-ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு <>இங்கு க்ளிக் செய்து <<>>‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News January 12, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!