News November 24, 2024
5 வயது மகளை கொன்ற தாய்.. அதிர்ச்சி பின்னணி

டெல்லி அசோக் விஹாரில் இச்சம்பவம் நடந்துள்ளது. HP’யை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் இன்ஸ்டாவில் டெல்லியைச் சேர்ந்த வேறொருவரை காதலித்தார். திருமண ஆசையில் டெல்லி வந்தவரை காதலனின் குடும்பம் ஏற்க மறுத்துள்ளது. காரணம், அப்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகள் (5) உள்ளார். திருமணத் தடையால், விரக்தியில் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய் மீது தற்போது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
Cinema Roundup: ‘ஜனநாயகன்’ OTT உரிமம் ₹121 கோடி

*மகேஷ்பாபு – ராஜமௌலி இணையும் படத்தின் டைட்டில் வரும் 15-ம் தேதி வெளியாக உள்ளது. *‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் ₹121 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல். *‘குட் பேட் அக்லி’-யில் இளையராஜா பாடல் பயன்படுத்திய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு. *‘அரசன்’ படத்தின் கதை தனக்கு தெரியும் என நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
கூகுள் மேப்பில் வருகிறது புது அம்சங்கள்

இந்திய பயனர்களுக்காக கூகுள் மேப்பில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. Gemini AI, விபத்து பகுதி, அதிகபட்ச வேக வரம்பு உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுவரப்பட உள்ளன. குறிப்பாக Voice Interaction வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், வழியில் உணவகம் ஏதும் உள்ளதாக, அங்கு பார்க்கிங் எப்படி என வண்டி ஓட்டும் போது, நமது தேவைகளை அதனுடன் கலந்துரையாடி பெறலாம்.
News November 7, 2025
அடுத்த சில மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பொழியும்

அடுத்த சில மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவு நேர பயணம் மேற்கொள்வோர் பாதுகாப்பாக செல்லுங்கள். மேலும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?


