News November 24, 2024
ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை..!

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை தவிர, உப்பு, டீ தூள், சாம்பார் பொடி போன்ற மளிகைப் பொருட்களும் விற்கப்படுகின்றன. இதனை பெரும்பாலானோர் வாங்காத போதிலும், அவற்றை கட்டாயப்படுத்தி ரேஷன் ஊழியர்கள் விற்பதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், கார்டுதாரர்களின் விருப்பமில்லாமல் மளிகைப் பொருட்களை விற்கவே கூடாது என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
டைப்-2 நீரிழிவு நோயா? இந்த பழங்களை தொட்றாதீங்க!

நீரழிவு நோய் உள்ளவர்கள் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது மிக அவசியம். அதன்படி, வாழைப்பழத்தில் ஃபிரக்டோஸ் & சுக்ரோஸ் இருப்பதால், அதனை வாரத்திற்கு 2-3 முறைக்கு மேல் சாப்பிடக் கூடாது. சப்போட்டா, மாம்பழம் & சீத்தாப்பழத்தில் அதிகப்படியான சர்க்கரைச் சத்து, உயர் கிளைசெமிக் குறியீடு (GI) மற்றும் குறைந்த நார்ச்சத்து உள்ளது. எனவே இவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News January 29, 2026
அதிமுகவை துடைத்தெறிய வேண்டும்: CM ஸ்டாலின்

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இன்றைக்கு இருக்கும் ஒரே மாநிலம் TN தான், அதற்கு திமுக தான் காரணம் என CM பேசியுள்ளார். TN-ன் அமைதிச் சூழல் சிலரின் கண்களை உறுத்துகிறது என்றும், எப்படியாவது குழப்பம் ஏற்படுத்தலாமா என்று அவர்கள் போடும் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பாஜகவுக்கு துணைபோகும் அதிமுகவை வரும் தேர்தலில் துடைத்தெறிய வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
News January 29, 2026
6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு தருவதாக ஆசைக்காட்டி சிறுமியின் மறைந்த சகோதரனின் 10, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று நண்பர்கள் இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 2 சிறுவர்கள் கைதான நிலையில், 3-வது சிறுவனும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


