News November 24, 2024

குமரியில் ஒரே நாளில் 4259 பேர் விண்ணப்பம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் 642 பகுதிகளில் மொத்தம் 1702 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேற்று(நவ.23) நடந்தது. பெயர் சேர்க்க நேற்று மட்டும் 4259 பேர் விண்ணப்பித்திருந்தனர். பெயர் நீக்கம் செய்ய 634 பேர் விண்ணப்பித்திருந்தனர். இன்றும் சிறப்பு முகாம் நடக்கிறது. மேலும், வெள்ளிச்சந்தை பள்ளியில் நடந்த முகாமை ஆட்சியர் அழகுமீனா பார்வையிட்டார்.

Similar News

News August 7, 2025

குமரி: பத்து நாளில் 10 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கின்கால் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க மதிப்பூதிய அடிப்படையில் ஒரு பெண் ஆற்றுப்படுத்துநர் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.(10 நாட்கள் மட்டும்). இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து நாளை (ஆக.08) மாலைக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.தொடர்புக்கு-04562-277014.

News August 7, 2025

இடைநிலை துணை தேர்வு சான்றிதழ் பெற அறிவுறுத்தல்

image

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தியில்;2021 இடைநிலை துணைத்தேர்வு மற்றும் மே.2022 பொதுத்தேர்வு / ஆக.2022 இடைநிலை துணைத் தேர்வு வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித் தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய நுழைவுச் சீட்டுடன் நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

News August 7, 2025

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர தேதி நீட்டிப்பு

image

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை 19.06.25 முதல் நடைபெற்று வருகிறது. நேரடி மாணவர் சேர்க்கை மூலம் சேர்க்கை பெற கால அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ-யில் தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அழகுமீனா இன்று (ஆக.7) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!