News November 24, 2024

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

image

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறுகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை (26.11.2024) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை கடலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

Similar News

News August 18, 2025

வடிவேலு மாமா துரோகம் செய்தார்: விஜயகாந்த் மகன்

image

சொந்த மாமாவைபோல் வடிவேலுவை பார்த்ததாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆனால், வடிவேலு தங்களை ஏமாற்றி விட்டதாகவும், சின்ன வயதிலேயே துரோகத்தை பார்த்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், இப்போது யார் என்ன செய்தால் என்ன என்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது விஜயகாந்தை வடிவேலு கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

News August 17, 2025

அக்டோபர் 1 முதல் Gpay, Phonepeல் இந்த வசதி கிடையாது!

image

அவசர பணத்தேவை இருக்கும்போது, நண்பர்களிடம் போன் பண்ணி கடன் கேட்க தயங்குபவர்கள் கூட Gpay, Phonepe-ல் ஈசியாக MONEY REQUEST கொடுத்து வந்தனர். பணம் அனுப்பும் பகுதியிலுள்ள REQUEST அம்சம் மூலம் இதனை செய்யலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக். 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவாம். இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது நண்பர்களே!

News August 17, 2025

நாளை டிரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் நாளை டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் கடந்த 15-ம் தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்படிக்கையும் எட்டப்படாத நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

error: Content is protected !!